மகிந்த தலைமையில் இன்று இரண்டு முக்கிய கூட்டங்கள்

கூட்டு எதிரணி மற்றும் 16 பேர் அணியின் இரண்டு முக்கிய கூட்டங்கள், மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று பிற்பகல் 4 மணிக்கு, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் முதலாவதாக நடைபெறவுள்ளது.

இதையடுத்து, மாலை 6 மணியளவில், கூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகிய, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணியை உள்ளடக்கியதாக, இரண்டாவது கூட்டம் நடைபெறவுள்ளது,

இந்தக் கூட்டங்களில், நாடாளுமன்றத்திலும், வெளியிலும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக, எவ்வாறு இணைந்து செயற்படுவது என்பது தொடர்பாக, கலந்துரையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்தும், கலந்துரையாடப்படும் என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற குழத் தலைவர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!