சீனா உள்ளக அரசியலில் தலையீடு செய்வதை தடுக்க முடியாது!

இலங்கையின் ஏற்றுமதி மற்றும் ஏனைய விடயங்களில் செல்வாக்கு செலுத்தியுள்ள சீனா, எதிர்காலத்தில் உள்ளக அரசியலிலும் தலையீடு செய்வதை ஆட்சியாளர்களால் தடுக்க முடியாமல் போகலாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.

நாடாளுமன்றில் உரையாற்றிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இலங்கையின் இரண்டாவது சுதந்திரத்திற்காக தம்மையும் போராட பௌத்த பிக்குகள் அழைத்திருப்பது சிறந்த மாற்றத்திற்கான அறிகுறி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!