பிரித்தானியாவில் தலையின்றி கிடந்த சடலம்: முக்கிய தகவலை வெளியிட்ட பொலிசார்!

பிரித்தானியாவில் வயதான பெண்மணியின் தலை இல்லாத உடல் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் பொலிசார் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர். கடந்த ஜூன் 11 முதல் வெம்ப்லியில் உள்ள வீட்டில் இருந்து 67 வயதான Mee Kuen Chong மாயமானார். இதனையடுத்து, இரண்டு வாரங்களுக்கு பின்னர் 220 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள டெவன் பகுதியில் உள்ள சுற்றுலா தலத்தில் அவரது தலை இல்லாத உடல் கண்டெடுக்கப்பட்டது.

அப்பகுதியில் உள்ள மரங்களுக்கிடையே தலை இல்லாத உடல் கண்டெடுக்கப்பட்டு பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பில் தீவிரமாக விசாரித்து வந்த பொலிசார், 36 வயதான Jemma Mitchell என்ற பெண்மணியை கைது செய்துள்ளதுடன், அவர் மீது கொலை வழக்கும் பதிந்துள்ளனர்.

மலேசிய நாட்டவரான Mee Kuen Chong கடந்த 30 ஆண்டுகளாக வெம்ப்லியில் வசித்து வருகிறார். இந்த வழக்கில் பெண் ஒருவர் கைதாகியுள்ள சம்பவம் வெம்ப்லியில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தியுள்ளதாக பொலிஸ் தரப்பு கூறியுள்ளது.

இனி, இந்த கொலைக்கான காரணம் மற்றும் துண்டித்த தலை உள்ளிட்டவை தொடர்பில் கைதான பெண்மணியிடம் விசாரிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!