கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 986 பேர் அடையாளம்; 35 பேர் உயிரிழப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 500 யை கடந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 35 உயிரிழப்புகள் நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, 17 ஆண்கள் மற்றும் 18 பெண்கள் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 502 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், நாட்டில் நேற்று கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்த ஆயிரத்து 598 பேர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 44 ஆயிரத்து 437 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 986 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 74 ஆயிரத்து 17 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான 26 ஆயிரத்து 111 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!