கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 1453 பேர் அடையாளம் – 37 உயிரிழப்புகள் பதிவு

நாட்டில் கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஆயிரத்து 453 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 79 ஆயிரத்து 59 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 53 ஆயிரத்து 14 ஆக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 37 உயிரிழப்புகள் நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளன.

18 ஆண்கள் மற்றும் 19 பெண்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 611 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 22 ஆயிரத்து 471 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!