டயகம சிறுமியை கொழும்பிற்கு அழைத்து வந்த நபரிடம் இன்றைய தினம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொரள்ளை, பௌத்தாலோக வீதியில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டிலிருந்த சிறுமி ஒருவர் எரிகாயங்களுடன் கடந்த ஜூலை 3ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த சந்தர்ப்பத்தில் உயிரிழந்தார்.
அது தொடர்பான மேலதிக விசாரணைகளை தொடர்ந்தும் கொழும்பு சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்பு பிரிவு, பொரள்ளை பொலிஸார் உடன் இணைந்து முன்னெடுத்து வருகின்றது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!