நம்பிக்கையில்லா பிரேரணை படுதோல்வி!

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 91 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று மாலை வாக்கெடுப்பு இடம்பெறுவதற்கு முன்னதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரஹ்மான் உரையாற்றிய போது, இடையில் விமல் வீரவன்ச குறுக்கிட்ட நிலையில் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இதனையடுத்து, இடம்பெற்ற வாக்கெடுப்பில் பிரேரணைக்கு ஆதரவாக 61 வாக்குகளும் எதிராக 152 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதனால் 91 வாக்குகள் வித்தியாசத்தில் கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்ததாக சபாநாயகர் அறிவித்தார்.

இதனையடுத்து, ஓகஸ்ட் 03ஆம் திகதி காலை 10 மணிவரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!