மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை தொடர்ந்தும் அமுலில் -இராணுவத் தளபதி

மறுஅறிவித்தல் வரை மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை அமுலில் காணப்படும் என ராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

பொது சேவைகள் கருதி மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடுகளை இலகுபடுத்துவது தொடர்பில் இதுவரை எந்தவித தீர்மானங்களும் மேற்கொள்ளவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்

பஸ் மற்றும் ரயில்சேவைகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை மட்டுப்படுத்தப்பட்டளவில் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும் மறுஅறிவித்தல் வரை மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக ராணுவத்தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்

நாட்டின் தற்போதையை நிலையினை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!