இன்னொரு கறுப்பு ஜுலை வேண்டாம்!

இன்னொரு கறுப்பு ஜுலை வேண்டாம் எனத் தெரிவித்து கொழும்பில் நேற்று பிற்பகல் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கம் இந்த போராட்டத்தை நடத்தியது.

மனித உரிமை செயற்பாட்டாளரான அருட்தந்தை சத்திவேல் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் கத்தோலிக்க ஆயர்கள், பௌத்த பிக்குகள், சிவில் உரிமை செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.

இதன்போது போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீண்டுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம், இனவாதம் வேண்டாம்,தமிழ் மற்றும் முஸ்லிம்களின் கூட்டு உரிமைகளை பாதுகாக்கவும் என கோரி பதாதைகளை தாங்கியிருந்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!