டெல்டா தொற்றாளர் தொகை 61 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் டெல்டா தொற்றின் வேகம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.வவுனியா மற்றும் முல்லைத்தீவு பகுதியிலும் டெல்டா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேபோன்று கோட்டே, கொலன்னாவ, அங்கொட, நவகமுவ, இரத்மலானை, மஹாபாககே, கட்டுநாயக்க, நீர்கொழும்பு, பேருவளை காலி, மாத்தறை,மற்றும் தம்புள்ளை, ஆகிய இடங்களிலும் டெல்டா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் இதுவரை 61 கொவிட் டெல்டா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!