நாட்டை மூடிவிட்டு முன்னோக்கி செல்ல முடியாது! மைத்திரிபால சிறிசேன

கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் நாட்டை மூடிவிட்டு முன்னேறுவது கடினமான பணி என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“சுகாதார மற்றும் பாதுகாப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் அதே வேளையில், அரச சேவைகளை மீண்டும் தொடங்குவதில் எந்த தவறும் இல்லை என்று தான் நம்புகிறேன்.

தொற்றுநோய்க்கு மத்தியில் வளர்ந்த நாடுகளும் தொடர்ந்து செயல்படுகின்றன. நாட்டை மூடிவிட்டு முன்னோக்கி செல்ல முடியாது, அதே சமயம் நிலவும் அபாயத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!