விடுதலைப் புலிகளை நினைவு கூருவதில் என்ன தவறு?

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஆட்சியின் போது எவ்வாறு நினைவேந்தல்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டதோ அதேபோன்று ராஜபக்ஸ ஆட்சியிலும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர், ஜே.வி.பியின் போராளிகளை நினைவு கூர அனுமதி வழங்கப்படுமாயின், உரிமைக்காக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரை நினைவுக் கூருவதில் என்ன தவறு இருக்கின்றது என கேள்வி எழுப்பியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!