“தடுப்பூசியை நம்பி பயனில்லை”: கோவிட் – 22 மிகவும் ஆபத்தானது – நிபுணர் எச்சரிக்கை!

உலக அளவில் ஆதிக்கம் செலுத்தும் டெல்டாவை விட “கோவிட் -22” என அழைக்கப்படும் ஒரு புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு மிகவும் ஆபத்தானது என்று ஒரு நிபுணர் எச்சரித்துள்ளார். பெடரல் தொழில்நுட்ப நிறுவனமான ETH Zurich இன் பேராசிரியர் – நோயெதிர்ப்பு நிபுணர் மருத்துவர் சாய் ரெட்டி (Sai Reddy), தற்போதுள்ள கொரோன வைரஸ் வகைகளை விட, இந்த ‘Covid-22’ கலவையானது தொற்றுநோயின் புதிய மற்றும் மிகவும் ஆபத்தான கட்டத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறார்.

“ஒரு புதிய மாறுபாடு தோன்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம், அதனால் இனி நாம் தடுப்பூசிகளை மட்டும் நம்பியிருக்க முடியாது” என்று நோயெதிர்ப்பு நிபுணர் சாய் ரெட்டி கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், ‘COVID-21’ என்று அழைக்கப்படும் டெல்டா வகை வைரஸ், எல்லாவற்றிற்கும் மேலாக அதிக அளவில் தொற்றும் மாறுபாடாக இருந்தது.

தென்னாப்பிரிக்கா (பீட்டா) மற்றும் பிரேசில் (காமா) ஆகியவற்றிலிருந்து வந்த கொரோனா வைரஸ் அதிக தொற்றுநோயாக மாறினால், அல்லது டெல்டா பிறழ்வுகளை உருவாக்கினால், நாம் தொற்றுநோயின் ஒரு புதிய கட்டத்தைப் பற்றி பேச வேண்டியிருக்கும்” என்று ரெட்டி கூறினார்.

“இது வரும் ஆண்டின் பெரிய பிரச்சனையாக மாறும். கோவிட்-22 நாம் இப்போது அனுபவிப்பதை விட மோசமான விளைவை ஏறப்டுத்தலாம்.” என்றார்.

மேலும், தடுப்பூசி போடாத எவரும் “சூப்பர்-ஸ்ப்ரெடர்” ஆக முடியும். 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போட முடியாது என்பதால், அவர்கள் சாத்தியமான சூப்பர் ஸ்ப்ரெடர்களாக மாறலாம், என்று ரெட்டி கூறினார்.

“இந்த புதிய கொரோனா வைரஸ் வைகையை அதிக அளவு ஆன்டிபாடிகளுடன் நாம் எதிர்கொள்ள வேண்டும், அதுதான் தடுப்பூசியின் மூன்றாவது பூஸ்டர் டோஸ் செய்கிறது” என்று அவர் விளக்கினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!