ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்தவரின் வெளிநாட்டு சொத்துகளும் அம்பலம்!

உலகின் முக்கிய அரச தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் செல்வந்தர்களின் இரகசிய நிதி முதலீடுகள் பற்றிய தகவல்கள் பென்டோரா பேப்பர்ஸ் -2021 என்ற பெயரில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதில் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த அரசியல் ஒருவரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

இந்த இரகசிய ஆவணத்தில் 35 அரச தலைவர்கள் உள்ளடங்குவதுடன், அரசியல்வாதிகள் உள்ளிட்ட 300க்கும் அதிகமான முக்கியஸ்தர்களின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இவ்வாறு வெளியாகியுள்ள பட்டியலில், முன்னாள் பிரதி அமைச்சரான, ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த நிருபமா ராஜபக்ச மற்றும் அவரது கணவன் திருநடேசன் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இவர்களின் வெளிநாட்டு சொத்துகள் பற்றி அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!