அரசாங்கம் தற்போது மக்களின் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்புவது அவசியம் – விமல் வீரவங்ச

அரசாங்கம் தற்பொழுது மக்களின் நம்பிக்கையை மீளக்கட்டியெழுப்புவது அவசியமாகும் என ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவிக்கின்றார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்த்தினால் இழைக்கப்பட்ட தவறுகள், மக்களுக்கு ஆற்றப்படாத சேவைகள் தொடர்பில் சிந்தித்து அரசாங்கம் செயல்படுவது இந்த சந்தரப்பத்தில் சிறந்ததாக அமையும் என விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

இதனை தவிர்த்து கடந்த காலம் தொடர்பில் தொடர்ச்சியாக உரையாடிக்கொண்டிருந்தால் எவ்வித பயனும் ஏற்படபோவதில்லை என ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச மேலும் தெரிவித்தார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!