பயணக்கட்டுப்பாடுகள் தொடர்பில் இன்று கலந்துரையாடல்!

பயணக்கட்டுப்பாடுகள் மற்றும் தற்போதைய நிலைமை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெறவுள்ள கொரோனா தடுப்பு தேசிய செயலணியின் கலந்துரையாடலில் ஆராயப்படவுள்ளது

இதன்படி பயணக்கட்டுப்பாடுகளை கடுமையாக்குதல் அல்லது தளர்த்துவது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொதுமக்கள் பலர் சமூக இடைவெளியினை தவிர்த்து செயற்படுகின்றமை அண்மைய சில நாட்களாக அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
இந்த நிலைமையானது நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை மேலும் அதிகரிக்கும் என சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!