கொழும்பில் அதிகாலையில் நடந்த துப்பாக்கி சூடு – ஒருவர் மரணம் – மற்றொருவர் காயம் October 26, 2021 8:03 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest கொழும்பில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பாதாள உலக குழு உறுப்பினர் அங்கொட லொக்காவின் உதவியாளர் ஒருவரே துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார்.34 வயதுடைய மிலிந்த என்ற இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளதாக முல்லேரியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் அங்கொட லொக்காவின் பிரதான உதவியாளராக செயற்பட்டுள்ளார்.தற்போது இத்தாலியில் வசிக்கும் சமிந்த என்பவருக்கு நெருக்கமானவர் எனவும் தெரியவந்துள்ளதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள், இன்று அதிகாலை 3 மணியளவில் முல்லேரியா, தெல்கஹவத்தை பிரதேசத்தில் உள்ள விகாரைக்கு அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளனர்.விகாரைக்கு அருகில் உள்ள நபரின் வீட்டிற்கு சென்று கதவை தட்டி வீட்டில் உள்ளவர்களை எழுப்பிவிட்டு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…