‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் ஜனாதிபதி செயலணி ஸ்தாபிப்பு

ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் 13 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் நேற்று இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்  வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த  செயலணியின் உறுப்பினர்களாக, பேராசிரியர் தயானந்த பண்டார, பேராசிரியர் சாந்திநந்தன விஜேசிங்க, பேராசிரியர் சுமேத சிறிவர்தன, என். ஜி. சுஜீவ பண்டிதரத்ன, சட்டத்தரணி இரேஷ் செனெவிரத்ன, சட்டத்தரணி சஞ்ஜய மாரம்பே, எரந்த நவரத்ன, பாணி வேவல, காலி உலமா சபை மௌலவி மொஹொமட், விரிவுரையாளர் மொஹொமட் இந்திகாப், கலீல் ரஹுமான், அஸீஸ் நிசார்தீன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!