பரீட்சைகளை நடாத்துவதற்கான புதிய திகதிகள் அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளை நடாத்துவதற்கான  திகதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன

இதன்படி, 2021 ஆம் ஆண்டுக்கான 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையினை 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சையினை 2022 ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதம் 07 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 5 ஆம் திகதி வரை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையினை 2022 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் நடாத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!