வரிசையில் நிற்க வேண்டாம்! – போதிய கையிருப்பு உள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும், அதனால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளை நிரப்ப வேண்டிய அவசியமில்லை என்றும், மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார்.

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் 50 நாட்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அதனால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படப் போகின்றது என்பதன் அடிப்படையில் பொதுமக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் நாட்டின் 14 சதவீத பெற்றோல் மற்றும் 29 சதவீத டீசல் தேவையை மட்டுமே நிறைவு செய்கிறது.

அதனால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது. யாழ். மாவட்டத்தில் போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது. யாழ். மாவட்டத்துக்கான எரிபொருள் விநியோகமும் சீராக இடம்பெறுகிறது.
காங்கேசன்துறை தொட்டியில் பெற்றோல் 92 ஒக்ரைன் – 155,000 லீற்றரும் டீசல்- 2,600,000 லீற்றரும் மண்ணெண்ணெய்- 165,000 லீற்றரும் காணப்படுகிறது. இவை பகிர்ந்தளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!