இராணுவ மயமாக்கலுக்கு எதிராக யாழ். கோட்டை முன் போராட்டம்!

யாழ். கோட்டைப் பகுதியில் இராணுவ முகாம் அமைப்பதற்கு காணி வழங்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும், அங்கு இராணுவ முகாம் அமைக்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியும், நாளை கண்டனப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. யாழ். கோட்டையின் தென்புற நுழைவாயில், நாளை பிற்பகல் 2 மணிக்கு இப்போராட்டம் நடைபெறவுள்ளது.

இப்போராட்டத்தில் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!