எரிவாயு வெடிப்பு தொடர்பில் அரசாங்கம் உண்மையை மறைத்து செயற்படுவதாக சஜித் குற்றச்சாட்டு

எரிவாயு வெடிப்பு சம்பவம் தொடர்பில் அரசாங்கம் உண்மையை மறைத்து செயற்படுவதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Ethyl Mercaptan என்ற மண மூட்டிக்கலவையை அதிகரிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவிக்கின்ற போதிலும் அதில் எவ்வித உண்மையும் இல்லை என எதிர்கட்சி தலைவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவமானது அரசாங்கத்தின் திட்டமிடப்பட்ட குற்றம் என்பதோடு, குற்றவாளிகளை இனம் கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!