மங்களவின் சூத்திரம் மீண்டும் தேவை!

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் முன்னாள் நிதி அமைச்சரான அமரர் மங்கள சமரவீர, அறிமுகம் செய்திருந்த எரிபொருள் விலைசூத்திரமே, எரிபொருள் பிரச்சினைக்கு சிறந்த தீர்வாகும் என தெரிவித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, எனவே மங்களவின் எரிபொருள் விலை சூத்திரத்தை அரசாங்கம் மீள அமுல்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
   
இதுதொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அக்கட்சியின் உறுப்பினரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர, இந்த சூத்திரமே சிறந்த தீர்வாகுமென நான் கூறுவேன். அச்சூத்திரத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தினால் எரிபொருள் பிரச்சினைகள் ஏற்படாது என்றார்.

உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கும்போது உள்நாட்டிலும் விலை அதிகரிக்கிறது.எனினும் உலகசந்தையில் எரிபொருளின் விலை குறைவடைந்தாலும் உள்நாட்டில் குறைவடைவதில்லை எனவும் தெரிவித்தார்.

எனவே,உலகசந்தைக்கு ஏற்ப எரிபொருளின் விலையை உள்நாட்டில் தீர்மானிக்கக் கூடிய முறையொன்று நாட்டுக்கு அவசியம். எதிர்காலத்திலாவது இதனை செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

நல்லாட்சி அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட நல்ல விடயங்களையும் நல்லதல்ல எனக்கூறி தள்ளிவைக்காது, நல்ல விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார் .

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!