விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை அனுமதி

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளின் பெரும்போகத்தில் நெல் அறுவடை குறையும் நிலையில் அதற்கான இழப்பீடுகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, விவசாயிகளின் வருமானத்தை பாதுகாக்கும் வகையில் குறித்த நடவடிக்கைகளுக்காக 40 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

சேதன பசளையினை பயன்படுத்தி உரிய விளைச்சலைப் பெற்றுக்கொள்ளாத விவசாயிகளுக்கு மாத்திரம் இவ்வாறு இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!