முட்டை தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்துமாறு கோரிக்கை – பிரசன்ன ரணதுங்க January 31, 2022 8:11 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பில் முட்டை வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கோரிக்கை விடுத்துள்ளார்.இந்த விடயம் தொடர்பில் அவர் பொலிஸ்மா அதிபருக்கு இன்று கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.இதற்கமைய குறித்த முட்டை வீச்சு தாக்குதல் தொடர்பில் முறையானதும் பக்கச் சார்பற்றதுமான விசாரணையை மேற்கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் பாரபட்சமின்றி தண்டனை வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக அவதானம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…