4000 தமிழ் அகதிகளை தாயகத்துக்கு திருப்பி அனுப்பவுள்ளது இந்தியா!

தமிழ்நாட்டில் தங்கியுள்ள 4000 தமிழ் அகதிகளை கப்பல் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்ப இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுபற்றி, இலங்கை அரசாங்கத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சு தகவல் அனுப்பியுள்ளது. பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினரான சுப்ரமணியன் சுவாமி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுபற்றிய பதிவு ஒன்றை இட்டுள்ளார். “இலங்கை அகதிகளை தாயகத்துக்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு, கடித மூலம் விடுத்த கோரிக்கையை ஏற்று, நடவடிக்கை எடுத்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கு எனது நன்றி.

முதற்கட்டமாக 4000 அகதிகளை கப்பல் மூலம் அனுப்பி வைக்கவுள்ளதாக, இலங்கை அரசாங்கத்துக்கு இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம் அவர்களை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கும்” என்று அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!