உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சஹ்ரானின் மனைவியிடம் குற்றப்புலனாய்வு பிரிவு இன்று முதல் விசாரணை February 12, 2022 7:53 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியாவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினூடாக இன்று முதல் விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதிமன்ற அனுமதியின் பிரகாரம் சஹ்ரானின் மனைவியிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதற்கமைய குற்றப்புலனாய்வு பிரிவினூடாக இன்று முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை வெலிக்கடை சிறைச்சாலையில் பாத்திமா ஹாதியாவிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு குளியாப்பிட்டி நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான மேலதிக விசாரணை நிமித்தம் சஹ்ரானின் மனைவியிடம் சாட்சியம் பதிவு செய்வதற்கு அனுமதி வழங்குமாறு குற்றப்புலனாய்வு விசேட பிரிவு நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்திருந்தது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…