விக்னேஸ்வரனின் உத்தரவுக்கு எதிரான இடைக்காலத் தடையை நீடித்தது நீதிமன்றம்

வடக்கு மாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் பதவியில் இருந்து. டெனீஸ்வரனை நீக்கிய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உத்தரவை நடைமுறைப்படுத்தும் அரசிதழ் மீதான இடைக்கால தடை உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நீடித்துள்ளது.

அத்துடன், நீதியரசர்கள் குமுதினி விக்கிரமசிங்க, ஜனக டி சில்வா ஆகியோரைக் கொண்ட அமர்வு நேற்றுமுன்தினம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

அத்துடன் மீண்டும் இந்த வழக்கு ஜூலை 23ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வட மாகாண முதலமைச்சர் தம்மை பதவியில் இருந்து நீக்கியது செல்லுபடியற்றதென உத்தரவிடக் கோரி டெனீஸ்வரன் தாக்கல் செய்த மனு மீதே, மேன் முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!