நாட்டில் இன்று 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவில் மழைவீழ்ச்சி

நாட்டின்  கிழக்கு  பகுதியில் உருவாகியுள்ள  பனிமூட்டம் காரணமாக  பல பாகங்களில் இன்று  100  மில்லிமீற்றருக்கும் அதிகளவில்  மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

 இதன்படி  கிழக்கு  மற்றும் ஊவா   மாகாணங்களில்   மாத்தளை பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும்  இவ்வாறு மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
 
 குறித்த பகுதிகளில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு   100  மில்லிமீற்றருக்கும் அதிகளவில்  மழைவீழ்ச்சி பதிவாகும்  எனவும்  எதிர்வு கூறப்பட்டுள்ளது.

 நாட்டின் ஏனைய பகுதிகளில்  பிற்பகல் அல்லது இரவு வேளைகளில்  இடியுடன் கூடிய மழைபெய்யும் எனவும் அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!