எரிபொருள் தாங்கிய இரண்டு கப்பல்கள் இன்று நாட்டிற்குள்

எரிபொருள் தாங்கிய கப்பல்கள் இரண்டு இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு தேவையான பெற்றோல் மற்றும் டீசல் ஆகிய குறித்த கப்பலில் கொண்டுவரப்படவுள்ளதாக அவர் கூறினார்.

மேலும் இந்த இந்த கப்பலில் உள்ள எரிபொருளை  பெற்றுக் கொள்ள 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இதேவேளை நாட்டின் பல்வேறு பகுதிகளில் எரிபொருள் பற்றாக்குறை நிலவுகின்றமையால் மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

அத்துடன் கடந்த மூன்று நாட்களாக பல்வேறு எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் வழங்கப்படவில்லை எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!