நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்வதற்கான சாத்தியம்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள    தாழமுக்கம் திருகோணமலை கடற்பிராந்தியத்தில் இருந்து  190 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது .

இந்த நிலைமையானது அடுத்து வரும் சில மணித்தியாலங்களில் ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடைந்து வடமேற்கு திசையில் இலங்கையின் கிழக்கு கரையை அண்மித்ததாக தமிழ்நாட்டுக் கரையை நோக்கி நகரக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மழையுடனான வானிலை நிலவும் என  எதிர்வு கூறப்பட்டுள்ளது. 
அத்துடன் ஊவா மாகாணத்திலும் இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா  ஆகிய மாவட்டங்களின்  பல பகுதிகளில் பிற்பகல் அல்லது  இரவு  வேளையில்  இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது   மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!