சஜித் அணியின் ஓயாத அலை 15இல் ஆரம்பம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் ‘ஓயாத அலை’ எனும் பெயரின் கீழ் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அரச எதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரச கூட்டணிக்குள் மோதல் ஏற்பட்டு அமைச்சர்கள் இருவர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த சூழ்நிலையில், அரசுக்கு எதிராகத் குறிப்பிட்ட தொடர் போராட்டங்களை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது ஐக்கிய மக்கள் சக்தி.

இம் முடிவானது சஜித் தலைமையில் நேற்று நடைபெற்ற முக்கிய கூட்டத்திலேயே எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!