அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்கவில்லை

நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பங்குபற்றவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் அமைச்சுப்பதவி பறிக்கப்பட்டதன் பின்னர் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறெனினும் என்ன காரணத்திற்காக ஜனாதிபதி அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!