எரிவாயு விநியோகம் ஆரம்பம் – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

நாட்டை வந்தடைந்துள்ள இரண்டு   கப்பல்களில் இருந்து   7 ஆயிரம்  மெட்ரிக் டொன் எரிபொருளை  இறக்கும் பணிகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு எரிவாயுக்கான கொடுப்பனவு தொடர்பான பிரச்சினைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நேற்றிரவு இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் கடன் பத்திரங்களை திறப்பது தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்

இதன்படி, கெரவலப்பிட்டி லிட்ரோ எரிவாயு சேமிப்பு முனையத்தில் இருந்து எரிவாயு விநியோகம்  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!