
இந்த நிலையில், ரஷ்யாவின் Volga-Dnepr விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று கடந்த பிப்ரவரி 27ம் திகதி ரொறன்ரோவில் அதிரடியாக தரையிறக்கப்பட்டது.
ஏங்கரேஜ் மற்றும் ரஷ்யா வழியாக சீனாவில் இருந்து கனடா வந்த அந்த சரக்கு விமானமானது ரொறன்ரோவில் தரையிறங்கிய சில மணி நேரத்தில் புறப்பட தயாரான நிலையில், அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன் தடையும் விதிக்கப்பட்டது.
குறித்த தகவலை கனடா போக்குவரத்தும் உறுதி செய்துள்ளதுடன், ரஷ்யா தொடர்புடைய ஒரே ஒரு விமானம் மட்டுமே தற்போது ரொறன்ரோவில் தரையிறக்கப்பட்டுள்ளதாகவும் கனடா போக்குவரத்து குறிப்பிட்டுள்ளது.
ஆனால், கனடா போக்குவரத்து நிர்வாகம் குறித்த விமானத்தை சிறைபிடிக்கவில்லை எனவும், உரிய அனுமதி பெறாததாலையே வெளியேற அனுமதிக்கப்படவில்லை எனவும் கனடா போக்குவரத்து விளக்கமளித்துள்ளது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!