நேற்றைய நாளில் அச்சிடப்பட்ட பணத்தொகை {விபரம்….}

இலங்கை மத்திய வங்கியினால் நேற்றைய நாளில் பாரிய அளவிலான தொகை பணம் அச்சிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

இதற்கமைய நேற்றைய நாளில் மாத்திரம் 55 தசம் 95 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அத்துடன், இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் 172 தசம் 34 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இலங்கையில் நாணய மாற்று வீதம் தளம் பல் நிலைக்கு விடப்பட்டுள்ளமையின் காரணமாக ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் இவ்வாறு தொடர்ச்சியாக பணம் அச்சிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!