ஜனாதிபதி பதவி விலகல் தொடர்பில் வெளியான தகவல்…?

ஜனாதிபதி கோட்டாபய  ராஜபக்‌ஷ பதவி விலகுவது தொடர்பில்  ஆலோசித்து வருவதாக சமூக வலைத்தளங்களில்   வெளியிடப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான தகவல்களில் எந்தவித உண்மை தன்மையும்  இல்லை எனவும், அவை அடிப்படை ஆதாரமற்ற விடயம்  என  ஜனாதிபதி ஊடகப்பிரிவு  குறிப்பிட்டுள்ளது. 

அத்துடன் ஜனாதிபதி  உறுதியும் தூரநோக்கு சிந்தனையுடன் செயற்படும் நபர்  என  ஜனாதிபதி ஊடகப்பிரிவு  வலியுறுத்தியுள்ளது. 

இதேவேளை பொது மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு  பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில்   ஜனாதிபதி  கவனம் செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
 
இந்த நிலையில் ஜனாதிபதியின் திட்டங்களை  முறியடித்து அரசாங்கத்தை ஸ்திரமின்மைக்கு பாதகம் ஏற்படுத்தும் வகையில்  பல்வேறு குழுக்களினால் இவ்வாறு தகவல்கள் பரப்பப்படுவதாகவும்   ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!