போராட்டக்களத்தில் இலக்கத்தகடு அற்ற மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் யார்! சபையில் சஜித் April 6, 2022 7:51 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest நாட்டில் ஏன் அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்ட்டது, எந்த காரணத்திற்காக நாட்டில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது? சமூக வலைத்தளங்கள் நாட்டில் முடக்கப்பட்டமைக்கான காரணம் என்ன என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.இன்றைய நாடாளுமன்ற அமர்வுகள் தற்போது ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையிலேயே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். இன்று நாட்டில் நிதி அமைச்சர் இல்லை. புது நிதி அமைச்சர் பதவி ஏற்றார் பின்னர் அவரே விலகிச் சென்றார் இதற்கான காரணம் என்ன? இன்று நாட்டில் நிதி அமைச்சர் யார் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகின்றேன் எனவும் குறிப்பிட்டார். அமைதியான போராட்டத்தில் இலக்கத்தகடு அற்ற மோட்டார் சைக்கிள்களில் ஆயுதம் தாங்கிய படையினர் வந்து செல்கின்றனர். யார் இவர்கள்? எதற்காக இப்படி வந்தார்கள்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…