நாட்டில் இன்று மின் தடையா?

நாட்டில் இன்றும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டினை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு மின் விநியோகத்தடையை அமுல்படுத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்றைய தினத்திலும்  மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்பட மாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய நாட்களில் இரண்டு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மாத்திரம் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, குறித்த திகதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதிகளில் இவ்வாறு மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படுமென இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!