நம்பிக்கையில்லா பிரேரணையே வருகிறது!

ஜனாதிபதியின் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையையே கொண்டு வரவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹபீர் காசிம் தெரிவித்துள்ளார்.

முன்னர் தீர்மானிக்கப்பட்டது போல அடுத்தவாரம் நாடாளுமன்றம் கூடும்போது முதல் அமர்விலேயே அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இது ஜனாதிபதிக்கு எதிரான அரசியல் குற்றவியல் பிரேரணையாகயிருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!