2மில்லியன் டொலர்களை கப்பம் செலுத்தி அமைச்சர்களை நியமித்த அரசாங்கம்- நளின் பண்டார

இலங்கையில் நேற்று பதவியேற்ற அமைச்சர்களில் 5 ராஜாங்க அமைச்சர்களுக்கு அரசாங்க கட்சி இரண்டு மில்லியன்கள் டொலர்கள் செலுத்தியுள்ளதாக நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது

நாடாளுமன்றில் இன்று இந்த தகவலை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பான தகவல்களை விரைவில் வெளியிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் இன்று பொதுமக்களுக்கு மருந்துகள் இல்லாத நிலையில் அரசாங்கம் தமது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள ஒரு உறுப்பினருக்கு 2 மில்லியன் டொலர்களை வழங்கியமையானது, மனித கொலைக்கு ஒப்பான விடயம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!