இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக  இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு அகதிகளாக செல்வோரின்   எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியை  சேர்ந்த  ஐந்து பேர் இன்று  அதிகாலை இந்தியாவின்  தனுஷ்கோடியை  சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  மன்னார் அடம்பன்  மற்றும் உயிலங்குளம் பகுதிகளைச் சேர்ந்த  பதிமூன்று பேர் நேற்று  இரவு பத்து மணியளவில் தனுஷ்கோடியின் அரிச்சல்முனை கடற்கரையை சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையான காலப்பகுதிக்குள்  மொத்தமாக அறுபது பேர் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்துள்ளமை  சுட்டிக்காட்டதக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!