அமெரிக்கத் தலையீட்டினால் சிறிலங்காவுக்கு அநீதிகள் – நவீன் திசநாயக்க

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் தலையீட்டினால் சிறிலங்கா பல்வேறு அநீதிகளை எதிர்கொண்டது என்று ஐதேகவின் தேசிய அமைப்பாளரும், பெருந்தோட்டத்துறை அமைச்சருமான நவீன் திசநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐதேக தலைமையகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது, அமெரிக்கா ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகியுள்ள நிலையில், சிறிலங்காவும் விலக வேண்டும் என்று பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் விடுத்திருந்த கோரிக்கை தொடர்பாக கருத்து வெளியிட்டார்.

“இது ஒரு அர்த்தமற்ற கருத்து. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் தலையீட்டினால் நாங்கள் பல்வேறு அநீதிகளை எதிர்கொண்டோம்.

ஆனால் இந்தச் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளோம். முன்னைய அரசாங்கம் இந்தச் சவால்களை எதிர்கொண்டு தோற்கடிக்கத் தவறி விட்டது.

இப்போது நாங்கள் இந்தச் சவால்களை வெற்றிகரமாக எதிர் கொண்டிருக்கிறோம். படிப்படியாக தடைகளைத் தாண்டிக் கொண்டிருக்கிறோம்.

எனவே, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தொடர்ந்து இருந்து, எமது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!