மகிந்த சரணம் கச்சாமி! பசில் சரணம் கச்சாமி! நாமல் சரணம் கச்சாமி! கூறுவது தமக்கு பழக்கமில்லை – ரணில் விக்ரமசிங்க

நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் நேற்று தம்மை பற்றி கூறிய கருத்துக்கள் தவறானவை என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

புதிய பிரதி சபாநாயகர் ஒருவரை தெரிவுசெய்யும் போது ரணில் விக்ரமசிங்க, ராஜபக்சர்களுக்காக செயற்படுகிறார் என்று சாணக்கியன் குற்றம் சுமத்தினார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவை சுயாதீனக் குழுவினர் வேட்பாளராக அறிவித்தபோது அதற்கு ஆதரளிக்குமாறு ரணில் வி்க்ரமசிங்க அனைவரிடமும் கோரியதாக சாணக்கியன் குற்றம் சுமத்தியிருந்தார்.

எனினும் இதனை மறுத்த ரணில் விக்கிரமசிங்க, 2013 ஆம் ஆண்டு பெப்ரவரி 22ஆம் திகதியன்று மகிந்த ராஜபக்சவினால், ராசமாணிக்கம் சாணக்கியன், மட்டக்களப்பு பட்டிருப்பு அமைப்பாளராக நியமிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!