முள்ளிவாய்க்காலில் இராணுவ கண்காணிப்பு தீவிரம்!

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை இடம்பெறவுள்ளது. இந்நிலையில், முள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவுத்தூபி அமைந்துள்ள வளாகத்தில் ஏற்பாட்டு பணிகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பினை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று நண்பகல் முதல் முன்னெடுத்துள்ளனர்.
    
இந்த நிலையில் இராணுவம், பொலிஸார் அப்பகுதிகளை சூழ நிறுத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு செல்லும் உள்ளக வீதிகள் மற்றும் நினைவேந்தல் வளாகத்துக்கு அண்மையான பகுதிகளில் பொலிஸார் ,இராணுவம், புலனாய்வாளர்கள் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுள்ளது.

அத்தோடு நினைவேந்தலுக்கான ஏற்பாடுகளை மக்கள் செய்து கொண்டிருந்த வேளை நினைவேந்தல் வளாகத்தை சுற்றி இராணுவ அதிகாரி ஒருவருடைய வாகனம் உள்ளிட்ட இரண்டு இராணுவ வாகனங்கள் அங்குமிங்கும் சுற்றி திரிந்து அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டடுள்ளனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!