இந்த ஆண்டு 6 பில்லியன் டொலரை திரட்ட முயற்சி!

அரசாங்கம் இந்த ஆண்டு 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை திருப்பிச் செலுத்துவதற்கு இலக்கு வைத்துள்ளதுடன் மேலும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டின் கையிருப்புகளை அதிகரிக்க இலக்கு வைத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
    
இதன்படி, சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்கள் தொடர்வதாகவும், இந்த மாத இறுதிக்குள் பேச்சுவார்த்தைகள் முடிவடையும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது பிரதமர் இதனை தெரிவித்துள்ளார். நிதி மற்றும் சட்ட ஆலோசகர்களை நியமித்ததைத் தொடர்ந்து, கடன் மறுசீரமைப்பு தொடங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் விளக்கினார்.

நெருக்கடியைத் தணிக்க உதவும் எந்தவொரு பிரிட்ஜிங் நிதியும் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையைப் பொறுத்தது என்று அவர் கூறினார். நன்கொடை அளிக்கும் நாடுகளுடன் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

ஜப்பானுடனான உறவுகள் முறிந்துவிட்டதாகவும், அந்த உறவுகளை சரிசெய்து அவர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க சிறிது காலம் எடுக்கும் என்றும் அவர் கூறினார்.

மருந்துத் தட்டுப்பாடு தொடர்பாக, அவசரமாகத் தேவையான மருந்துப் பொருட்களை வழங்குவதற்கான சர்வதேச வேண்டுகோளுக்கு மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீத் தலைமை தாங்குவதாக பிரதமர் விளக்கினார்.

உணவுப் பற்றாக்குறை பிரச்சினை தொடர்பில் உரையாற்றிய பிரதமர், உரத்தைப் பாதுகாப்பதற்கும் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தைத் தொகுப்பதற்கும் சமமான முன்னுரிமை அளிக்கப்படுவதாக விளக்கினார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!