அரச நிர்வாகத்தில் இனி எந்தப் பதவிகளையும் ஏற்கமாட்டேன் – பதவியை துறந்தார் பசில்

தனது தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக பசில் ராஜபக்ச அறிவித்துள்ளார்.  

தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது  அவர் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார். 
பசில் வழங்கிய செய்தி

இனி வரும் நாட்களில் எந்தவொரு அரச  நிர்வாக பதவிகளையும் தான் வகிக்கப் போவதில்லை என இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.  

தன்னை நாடாளுமன்றத்திற்கு  மீண்டும் தெரிவு செய்தவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டார்.  

அரசியலில் இருந்து விலகிச் செல்ல முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!