1500 ஏக்கரில் விவசாயம் செய்கிறது இராணுவம்!

உணவு பாதுகாப்பினை அடிப்படையாகக் கொண்டு இராணுவத்தினால் பசுமை விவசாய வழிகாட்டல் குழுவொன்று நிறுவப்பட்டுள்ளது.
    
இந்த திட்டமானது நாடு முழுவதும் உள்ள தரிசு அல்லது கைவிடப்பட்ட அரச காணிகள் உள்ளடங்களான 1500 ஏக்கர்களில் விவசாயம் மேற்கொண்டு இலங்கை உணவுப் பாதுகாப்பு நிகழ்ச்சி திட்டத்தை மேம்படுத்தும் முகமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க ஜூலை மாத தொடக்கத்தில் இவ் அவசர செயற்த்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும்லியனகே தலைமையில், பிரதிப் பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சன்னவீரசூரிய இத் திட்டத்தின் முகாமைத்துவத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!