சுகாதாரத் துறையினர் – எரிபொருள் நிரப்பு நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ..!

சுகாதாரத் துறையினருக்கு எரிபொருள் வழங்குவதற்கான எரிபொருள் நிரப்பு நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சுகாதாரத் துறையினருக்காக மேலும் 10 எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஒதுக்குவதற்கு வலுசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக சுகாதாரத் துறையினருக்கு எரிபொருள் வழங்குவதற்காக 74 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்டிருந்தன.

அத்துடன், சுகாதாரத் துறையினருக்கு வெள்ளிக்கிழமைகளில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முன்னுரிமை வழங்கி எரிபொருள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சுகாதாரத் துறையினருக்கு எரிபொருள் வழங்குவதற்கான எரிபொருள் நிரப்பு நிலையங்களின் எண்ணிக்கை 84 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!