பெற்றோல் கப்பலுக்கான முற்பணத் தொகையை செலுத்துவதற்கு நடவடிக்கை – வலுசக்தி அமைச்சர்

பெற்றோல் கப்பலுக்கான முற்பணத் தொகையை இன்று செலுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நாடாளுமன்றத்தில் இன்று இதனை அறிவித்தார்.

எதிர்வரும் 22 ஆம் திகதி நாட்டுக்குக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ள பெற்றோல் கப்பலுக்கான கொடுப்பனவே இவ்வாறு செலுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் குறித்த கப்பலை முன்கூட்டியே கொண்டு வர எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கமைய எதிர்வரும் 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளுக்கிடையில் குறித்த பெற்றோல் கப்பலை நாட்டுக்குக் கொண்டு வர எதிர்பார்ப்பதாகவும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.  

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!